Monday, October 5, 2009

மீண்டும் பள்ளி


கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறேன் என்று தான் பெயர் ஆனால் இன்னும் பள்ளியில் தான் படித்துகொண்டிருப்பதை போல் தான் இருக்கிறது. காரணம் தினமும் தேர்வுகள் லேப் தேர்வுகள் என்று நாங்கள் படும் கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா!
கல்லூரிஐ பற்றி நாங்கள் கண்ட கனவுகளை முதலிலேயே தகர்த்து விட்டது இந்த கல்லூரி!
நான் படிக்கபோகும் கல்லூரி சினிமாவில் வருவதை போல் இருக்கும், நினைத்த நேரம் காலேஜ்ஐ கட்டடிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டேன் . ஆனால் பள்ளியை
விட மோசமகாக இருக்கிறது.
மீண்டும் பள்ளிக்கே போகலாமோ என்று தோன்றுகிறது. கவலை இல்லா பருவம் !!!!!!!!!!

Sunday, October 4, 2009

தாமதத்திற்கு மன்னிக்கவும் !!!


கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் படிப்பு சிந்தையில் மூழ்கி விட்டேன் !!!!!!!!
இனி தினமும் எழுதுகிறேன் !!!!!!!!!!!

Tuesday, February 10, 2009

கோபம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கு ராமயணம் + ராமர் ரொம்ப பிடிக்கும். இப்பொது அதுவல்ல பிரச்சனை.ராமர் ராவணனை கொன்றுவிட்ட பிறகு சீதையை அயோத்திக்கு அழைத்துச் சென்ற பிறகு யரோ கூறினார்கள் என்று சீதையை அக்னி பரிட்சை செய்தார்.என்னதான் கடவுளகாக இருந்தலும் அவரையும் சந்தேகம் விடவில்லை!ஊரார் பேச்சைக் கேட்டு சீதையை வனத்தில் விட்டுவிட்டார்.இதனால் தான் எனக்கு ராமர் மீது கோபம்!
சொ என் இனிய பெண்களே ராமர் போல் கணவர் அமைய வேண்டும் என்று வேண்டாதீர்கள்!
எந்த நிலையிலும் நம் மீது நம்பிக்கை இழக்காத கணவனை தா இறைவா என்று பிரார்தனை செய்யுங்கள்!!!!!!!!!!!

Thursday, January 1, 2009

தமிழ் பாடல்------- புது விளக்கம்


நான் ராஜ் டிவியில் பட்டிமன்றம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஓர் தமிழசிரியர் பேசி கொண்டிருந்தார். அப்பொது அவர் அந்நியன் என்னும் ஒரு படத்தில் அன்டங் காகா கொன்டகாரி என்னும் பாட்டு இருக்கிறதல்லவ, அதற்கு தன் மாணவன் ஒருவன் அளித்த விளக்கத்தைப் பற்றி கூறினார்.


அன்டங் காகா கொன்டகாரி- இது எவ்வளவு பெரிய தெய்வ பக்தி பாடல் தெரியும டிச்சர் என்றானம்.


அதற்கு டிச்சர் என்னடா கூறுகிறாய் தெளிவாக சொல் என்றாரம்.


பையன்: அன்டம் - உலகம். ஆளும் கொன்டைக்காரி -அன்னை மீனாட்சி என்றான்.


டிச்சர்: அப்போ ரென்டக்க என்றால் என்ன என்று கேட்டார்.பையன்: அந்த பாட்டில் ஐயரெட்டு பல்லுகாரி என்று வரும் அல்லவா ஐயரெட்டு (5,6,8, )5=சிவன்,6=முருகன்,8=விஷ்னு(6= ஓம் சரவணபவ என்ற ஆறு எழுத்து தான்) இவர்கள் அனைவருக்கும் இரு மனைவிகள்.அதனால் ரென்டக்க ரென்டக்க என்று பாடுகிறொம் என்றானாம்.
இதை கேட்டு சிரித்து சிரித்து வயிறு புண்ணயிற்று!!!!!!!!!!!!!உங்களுக்கும் அப்படி தானே?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் இனிமையும் சேர்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன். புத்தாண்டு புதுமையோடு மலரட்டும்!!!!!!!!!!!!!

Sunday, March 16, 2008

திரைபடங்களில்.....................

இப்பொழுது உள்ள திரைபடங்களில் நடிகைகளில் பலர் அரை குறை ஆடை அணிகின்றனர்.பிறகு எதற்காக சென்சார் BOARDகள்? பெண் ஓர் வியாபர பொருளாக தான் காட்ட படுகிறாள். இதை பெண்களாகிய நாமும் பார்த்துக் கொன்டு தான் இருக்கின்றோம். இதை விட கேவலம் இல்லை.இதை நாம் எதிர்க்க வேண்டும்.பெண் ஓர் வியாபர பொருளாக தான் காட்ட படுகிறாள். இதை பெண்களாகிய நாமும் பார்த்துக் கொன்டு தான் இருக்கின்றோம். இதை விட கேவலம் இல்லை.இதை நாம் எதிர்க்க வேண்டும்.

Sunday, January 13, 2008

உழவர் திருந்நாள் வாழ்த்துகள்


போகி பண்டிகைக்கு நாம் அனைவரும் பழையதை எரிக்கின்றோம்.இந்த போகியாவது நாம் பழைவற்றை எரிக்காமல் அதை ஏழைகளுக்கு கொடுப்பொம். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.